2026 மே 02, சனிக்கிழமை

’கூட்டணி அமைத்து போட்டியிட்டதே வரலாறு’

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டணியொன்றை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பின்வாங்கவில்லை என, அதன் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (04) முற்பகல் ஜனாதிபதி ஆணைகு ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கூட்டணியொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளதுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது கூட்டணி அமைத்து வெற்றிப்பெற்றதே வரலாறு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்காரணமாக, எதிர்காலத்தில் பாரிய கூட்டணியொன்று உருவாக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பில் மக்கள் உள்ளமையால் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .