2026 மே 02, சனிக்கிழமை

கேட்டரிங் நிறுவனத்தில் 8 பேருக்கு கொரோனா

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

  ஸ்ரீ லங்கன் கேட்டரிங் செயற்பாட்டு பிரிவின் பணியாளர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான  நிறுவனத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவருக்கு இந்த மாதம் 14ஆம் திகதி செய்யப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது, அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், அவருடன் பணிபுரிந்த ஏனைய 7 பணியாளர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவர்களுடன் பணியாற்றிய ஏனைய அலுவலக சபையினருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .