2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கைதிகள் மீதான தாக்குதல் குறித்து ஆராய மூவரடங்கிய குழு நியமனம்

Editorial   / 2019 ஜனவரி 16 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும், சிறைக் கைதிகள் மீதான தாக்குதல் ​தொடர்பில் ஆராய மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாக, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய தலைமையில் இக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.  தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி வெளியானதை தொடர்ந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக, அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய குழுவின் அறிக்கை அடுத்த திங்கட்கிழமைக்கு முன்னதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்ஹவுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக, அமைச்சர் தலதா அத்துகோரல மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .