2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கொட்டாஞ்சேனை வீதிக்கு பூட்டு

Editorial   / 2019 ஜனவரி 18 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கே.சிறில் பெரேரா மாவத்தை இன்று (18) இரவு 10 மணி தொடக்கம், எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை  5 மணி வரை மூடப்படவுள்ளது.

நீர்க்குழாய்  அகழ்வுப் பணிகள் காரணமாக வாசல சந்தியிலிருந்து, வோல்ஸ் லேன் வீதி சந்தி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த வீதி எதிர்வரும் 25 ஆம் திகதி 10 மணி தொடக்கம், பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி வரை அதிகாலை 5  மணிவரை மூடப்பட்டிருக்கும் எனவும், பொலிஸ் தலைமையகம் ​ அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறித்த வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .