S. Shivany / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுடன் தப்பியோடிய இளைஞன் சப்புகஸ்கந்த மாகொல வடக்கு பகுதியில் வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சப்புகஸ்கந்த- மாகொல வடக்கு, தேவாலய வீதியில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து, 22 வயதுடைய நிமேஸ் மதுசங்க என்ற இளைஞன் தப்பியோடி இருந்தார்.
இந்நிலையில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இளைஞனை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், அவன் தங்கியிருந்த வீட்டில் இருந்தோரை தனிமைப்படுத்த நடவடிகை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் தெரியவந்துள்ளது.
36 minute ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
01 May 2026