2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கொரோனா தொற்று அதிகரிப்பு

Editorial   / 2020 ஜூன் 02 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் நேற்று (01) இரவு 10.30 மணியளவில் இணங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1643 ஆக அதிகரித்துள்ளது. 

இவர்கள் நால்வரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நேற்று பதிவான  10 புதிய தொற்றாளர்களிடையே 6 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும் இருவர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய இருவர் கடற்படையினருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .