2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கொழும்பில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்துக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதிவரை இந்த தடை அமுலில் இருக்கும்.

அமைதியான மற்றும் நீதியான முறையில் எதிர்ப்பினை வெளிப்படுத்தல் உள்ளிட்ட 5 நிபந்தனைகளும் இந்த உத்தரவில் உள்ளடங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

´சிங்கள ஜாதிக பலமுலுவ´ அமைப்பின் ஏற்பாட்டாளர் மெடில்லே பஞ்ஞாலோக தேரர் மற்றும் ராவணா பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் ஆகியோருக்கு எதிராக இந்த உத்தரவு இன்று (01) பிறப்பிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X