Editorial / 2019 ஜூலை 25 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேல்தெனிய ரஜமஹா விகாரையில் இடம்பெறும் வருடாந்த பெரஹெர நிகழ்வு காரணமாக, கொழும்பு- கண்டி பிரதான வீதியின் ரங்வல சந்தியிலிருந்து, மீபிட்டிய சந்தி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
27ஆம் திகதி சனிக்கிழமை இரவு 7 மணியிலிருந்து பெரஹெர நிறைவடையும் வரை குறித்த வீதியுடனான போக்குவரத்து தடைசெய்யப்படுமெனவும், சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதற்கமைய, கொழும்பிலிருந்து கண்டி நோக்கி வரும் வாகனங்கள் ரங்வல மாற்று வீதியூடாக, மீபிட்டிய வரை பயணித்து, பிரதான வீதிக்குச் செல்லுமாறும் போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அதேப்போல் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் வாகனங்கள் மீபிட்டிய மாற்று வீதியை வரை பயணித்து பிரதான வீதியை அடையலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
25 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago