2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கோட்டையிலிருந்து பொலன்னறுவைக்கு சொகுசு ரயில் சேவை

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு – கோட்டையிலிருந்து ​பொலன்னறுவை ரயில் நிலையம் வரையில், “புலத்திசி” என்ற பெயரில் சொகுசு ரயில் சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ரயிலின் முதலாவது பயணமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (11) பிற்பகல் 03.05 க்கு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சொகுசு ரயில் சேவையானது பொல்கஹவெல, குருநாகல், மஹவ, கலாவெவ, கெக்கிராவ, ஹபரண, ஹிங்குரங்கொடை ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுமென்றும் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .