Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Kanagaraj / 2015 நவம்பர் 10 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலஞ்சென்ற சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
இதேவேளை, அவரது பூதவுடலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா அநுர குமாரதிஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதத்தலைவர்கள் நேற்று திங்கட்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
சிங்கபூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர், கடந்த 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் இறுதி கிரியை, எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை, பூரண அரச மரியாதையுடன் தகனம் செய்யப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
45 minute ago
49 minute ago
3 hours ago