2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சஜித்தைக் களமிறக்க பின்வரிசை எம்.பிக்கள் ஏகமனதாகத் தீர்மானம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கக் கோரி அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் பின்வரிசை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, கொழும்பு தலவத்துகொடையில், நேற்று (20) நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தின் போது அமைச்சர் சஜித் பிரேமதாஸவை அடுக்க ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் களமிறக்க வேண்டுமென ஏகமனதாக தீர்மானமொன்றும் எடுக்கப்பட்டதாக, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

அத்துடன் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட நீதி, சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அதுகோரல, ஐக்கியத் தேசியக் கட்சிக்குள் எவ்விதப் பிளவுகளும் இல்லை என்றும், அக்கட்சியின் வேட்பாளரை 6ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் 123 மாகாண சபை உறுப்பினர்களில் 110 எம்.பிக்களும், அமைச்சர் தளதா அதுகோரள, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா, எம்.பிக்களான சந்திரானி பண்டார, ஹேஷான் ஹேவாவிதாரன, சமிந்த விஜேசிறி உள்ளிட்ட பலரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .