2026 பெப்ரவரி 25, புதன்கிழமை

சாட்சியமளிப்பதை வீடியோ செய்த பெண்ணுக்கு அபராதம்

Janu   / 2026 பெப்ரவரி 25 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில், தனது தந்தை சாட்சியமளிப்பதை கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரியொருவர் இதை அவதானித்த நிலையில் பெண்ணைக் கைது செய்து கையடக்க தொலைபேசியையும் பறிமுதல் செய்துள்ளார்.

அறியாமையினால் இந்தத் தவறைச் செய்ததாக பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டதுடன் குற்றத்தை ஒப்புக்கொண்ட குறித்த பெண்ணுக்கு, கொழும்பு தலைமை நீதவான் 1,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

அத்துடன் சம்பந்தப்பட்ட காணொளியை கையடக்க தொலைபேசியிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்ட நீதவான்,  வருங்காலத்தில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .