2026 மே 02, சனிக்கிழமை

சடலத்தை தூக்கும் வரை 'கடமைகளை ஏற்கோம்'

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி-கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை அங்கிருந்து அகற்றும் வரை, பிரேத பரிசோதனை உள்ளிட்ட நீதிமன்ற வைத்திய நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்கத் தீர்மானித்துள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய பிரிவின் வைத்தியர்களும் ருஹுனு பல்கலைக்கழகத்தின் நீதிமன்ற வைத்திய பிரிவின் வைத்தியர்களும் அறிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, இன்று (23) குறித்த வைத்தியசாலையின் பிரேத பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன், நீதிமன்ற வைத்தியர்களால் அன்றாடம் முன்னெடுக்கப்படும் வாகன விபத்துகளில் காயமடைந்தவர்களை பரிசோதிப்பது, மது அருந்தும் சாரதிகள் தொடர்பான அறிக்கையை வெளியிடுவது உள்ளிட்ட சகல நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .