2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

’சட்டவிரோத ஆட்கடத்தல்கள் அதிகரித்துள்ளன’

Editorial   / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

படகு மூலம் முன்னெடுக்கப்படும் ஆட்கடத்தல் முயற்சிகளை தடுக்க,  இலங்கையும் அவுஸ்திரேலியாவும் இணைந்து செயல்படுமென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 

மே மாதம் முதல் ஆட்கடத்தல் முயற்சிகள் அதிகரித்திருப்பது தொடர்பாக நேற்று(06) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே, வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, இதுவரையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த 37 படகுகளில் சென்ற 865 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதில் இலங்கையைச் சேர்ந்த 204 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .