2025 மே 21, புதன்கிழமை

சட்டவிரோதமாக வாகனம் இறக்குமதி செய்த மூவர் கைது

Simrith   / 2025 மார்ச் 05 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக ஒரு SUV மற்றும் ஒரு காரை இறக்குமதி செய்து போலி இலக்கத் தகடுகளுடன் பயன்படுத்தியதற்காக மூன்று பேரை பெல்மதுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், பெல்மதுல்ல பொலிஸ் அதிகாரிகள் 2024 ஒக்டோபரில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கராஜுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்களைக் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் விளைவாக நேற்று மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 49, 59 மற்றும் 61 வயதுடைய, எம்பிலிப்பிட்டிய மற்றும் மமடல பகுதியைச் சேர்ந்தவர்கள். 

சந்தேக நபர்கள் நேற்று பெல்மதுல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், 2025 மார்ச் 11 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .