2025 ஜூலை 16, புதன்கிழமை

’சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு’

Editorial   / 2018 ஒக்டோபர் 06 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

அரசியல் கைதிகள் என்று, எவரும் இந்த நாட்டில் இல்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இது தொடர்பாக கலந்துரையாடி, நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர கூறியுள்ளார்.

அண்மையில் கண்டி சட்டத்தரணிகள் சங்கத்துடன் நடைபெற்ற ஒரு கூட்டத்துக்குப் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தகவலறியும் சட்டத்தின் கீழ் எந்தவொரு நபரும் தகவல் பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறிய அவர், 2015 ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் இந்த நாட்டில் பாதாள உலக குழுவினர் செயற்படுத்தப்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கம் அதனை தடுத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .