Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 21 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்துக்கு ஆயுதங்களை கொண்டு வந்தவர்களுக்கு எதிராக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறையிட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காத நிலையில், நாடாளுமன்றத்தில் தமது கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கைக்கு எதிராக நாம் எவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாச கேள்வி எழுப்பினார்.
இன்று (21) மருதானையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் ஜனாதிபதி அரசமைப்புக்கு அமைய எடுத்த தீர்மானங்களை சபாநாயகர் எவ்வாறு சவாலுக்கு உட்படுத்த முடியும் என கேள்வி எழுப்பிய அவர், நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அப்பால், சபாநாயகரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு சபாநாயகர் கலரியிலிருந்த வெளிநாட்டு தூதுவர்கள் எழுந்து நின்று கைத் தட்டினர். இது யாருடைய இலாபத்துக்காக செய்யப்பட்டது. எனவே இன்று நாட்டில் இடம்பெறும் அரசியல் குழப்ப நிலை மேற்கத்தையே நாடுகளின் இணக்கபாடுடன் முன்னெடுக்கப்படும் சதி முயற்சியே காரணம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago