2026 மே 02, சனிக்கிழமை

சமூக ஊடக பயனர்கள் பதிவு: அமைச்சரின் விளக்கம்

J.A. George   / 2020 டிசெம்பர் 21 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தல் தொடர்பான தனது கருத்துக்கள் சில தரப்பினரால் திரிபுபடுத்தப்பட்டு பிரசாரப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், சமூக ஊடக பயனர்களை பதிவு செய்வது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டு டிஜிட்டல் செயற்பாட்டாளர்களை பதிவுசெய்வதையே அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த டிஜிட்டல் பன்னாட்டு கூட்டு நிறுவனங்கள் உள்ளூர் வணிகங்களை பெரிதும் பதிப்பதாகவும் இது நடுத்தர நிறுவனங்களை நேரடியாக பாதிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த வெளிநாட்டு டிஜிட்டல் தளங்கள் மூலம் நாட்டை விட்டு பெரும் தொகை வெளியேறுவதற்கு வழிவகுக்கிறது என்றும் அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .