Editorial / 2026 ஜனவரி 13 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

நெல் சந்தைப்படுத்தல் சபை 2025 ஆம் ஆண்டின் சிறுபோகச் செய்கையின் நாட்டரிசி நெல், சம்பா நெல் மற்றும் கீரிசம்பா நெல் முறையே ஒரு கிலோ கிராம் 120 ரூபாய், 125 ரூபாய் மற்றும் 132 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்துவரும் போகங்களில் சம்பா மற்றும் கீரிசம்பா நெற்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் குறித்த நெல் வகைகளைக் கொள்வனவு செய்வதற்காக தற்போது காணப்படுகின்ற குறைந்தபட்ச விலையை அதிகரிப்பது பொருத்தமானதென கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட விலைத் தீர்மானக் குழுவால் விதந்துரைக்கப்பட்டுள்ளது.
அவ்விதந்துரைகளின் அடிப்படையில், உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தரநியமங்களுடன் கூடிய நாட்டரிசி நெல் கொள்வனவை தொடர்ந்தும் ஒரு கிலோ கிராமுக்கு 120 ரூபாயாகப் பேணுவதற்கும், சம்பா நெல் கொள்வனவை ஒரு கிலோ கிராமுக்கு 125 ரூபாவிலிருந்து 130 ரூபாயாகவும், கீரிசம்பா நெல் கொள்வனவை ஒரு கிலோ கிராம் 132 ரூபாவிலிருந்து 140 ரூபாயாகவும் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அமைச்சரவைக்குத் தெளிவுபடுத்தியதடன், அதற்காக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago