2025 ஜூன் 25, புதன்கிழமை

சாலிந்த திசநாயக்கவின் இறுதிக்கிரியை நாளை மறுதினம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சரும்- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாலிந்த திசநாயக்கவின் இறுதிக்கிரியை நாளை மறுதினம் குருநாகலில் இடம்பெறவுள்ளது.

சாலிந்த திசநாயக்க (வயது-61) நேற்று மாலை கொழும்பில் காலமானார்.

உடல்நலக் குறைவினால் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமானார்.

1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் மூலம் முதன்முதலில் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த அவர், பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கங்களில் அமைச்சரவை அந்தஸ்துடைய, அமைச்சரவை அந்தஸ்து இல்லாத பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.

ஹிரியால தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராகவும் இவர் இருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .