2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சில்பசேனா தொழில்நுட்ப வர்த்தக கண்காட்சி நாளை ஆரம்பம்

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஒழுங்குசெய்துள்ள, சில்பசேனா தொழில்நுட்ப  வர்த்தக கண்காட்சி, கொழும்பு- பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நாளை18) காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜுவ சேனசிங்ஹவின் வழிகாட்டலில் இடம்பெறவுள்ள இக் கண்காட்சி, தொடர்ந்து 4 தினங்கள் இடம்பெறவுள்ளன. இதற்கமைய, நா​ளை ஆரம்பமாகும் இக் கண்காட்சி 21ஆம் திகதி வரை  இடம்பெறவுள்ளது.

சில்பசேனா கண்காட்சியானது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தலைமையில் நாளை ஆரம்பமாகவுள்ளதுடன், அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். அத்துடன், கண்காட்சியின் 2 ஆம் நாள் நிகழ்வு, கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன், 3 ஆம் நாள் நிகழ்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன், இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்ற உள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .