Mayu / 2024 செப்டெம்பர் 29 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்பள்ளிக்கு செல்ல மறுத்த ஐந்து வயது சிறுமிக்கு சூடு வைத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகஸ்தான பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த முப்பது வயதுடைய பெண்ணொருவர் தனது பிள்ளை முன்பள்ளிக்கு
செல்ல மறுத்ததால் உடலின் நான்கு பாகங்களில் கரண்டியால் சூடு வைத்துள்ளதோடு, சிறுமியை எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்து கண்டி பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் குறித்த பெண்ணை கைது செய்துள்ளது.
காயமடைந்த சிறுமி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago