2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’சேனா’ அழிப்புக்கு நிதி ஒதுக்குமாறு பிரதமர் பணிப்புரை

Editorial   / 2019 ஜனவரி 25 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

'சேனா' என்றழைக்கப்படும் படைப்புழுக்களை அழிப்பதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தப் புழுவை அழித்தல் மற்றும் இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கல் என்பது தொடர்பில், வாராவாரம் எழுத்துமூலம் அறியத்தருமாறு, விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசனுக்கு, பிரதமர் பணிப்புரை விடுத்தார்.

இதன்போது, மேற்படி படைப்புழுவை அழிப்பதற்காக, இதுவரையில் ஐந்து வகை இரசாயனப் பதார்த்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அந்த இரசாயனப் பதார்த்தங்களை, மனித சுகாதாரத்துக்கு பாதிப்பற்ற வகையில் பயன்படுத்த வேண்டுமென்று கோரினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .