Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 14 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிவதாகக் தன்னைக் காட்டிக்கொண்டு கந்தளாய் பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சுமார் 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாயை இவ்வாறு மோசடி செய்ததாக கூறப்படுகின்றது.
குறித்த நபர் தொடர்பில் கிடைக்பெற்ற முறைப்பாட்டையடுத்து, கந்தளாய் பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
விசாரணைகளையடுத்து, சந்தேகநபர் திங்கட்கிழமை (13) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சாவஸ்திபுர பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை, கந்தளாய் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை ஆஜர்ப்படுத்த கந்தளாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .