2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

’ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு சு.க. அழைப்பு’

Freelancer   / 2024 ஏப்ரல் 17 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்தனர் என நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ  தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே நீதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்படி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள எந்தவொரு அரசியல் கட்சியின் மீதும் பொதுமக்களுக்கு நம்பிக்கையில்லை எனவும்  விஜேதாச ராஜபக்ஷ  தெரிவித்தார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X