2026 மே 01, வெள்ளிக்கிழமை

ஜனாஸாக்களை அடக்கம் செய்ய நான்கு இடங்கள்

Nirosh   / 2021 மார்ச் 09 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸால் உயிரிழக்கும் காலி மாவட்ட  முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான நான்கு இடங்கள் பெயரிடப்பட்டுள்ளன.

இதுத் தொடர்பான கடிதம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால், காலி மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காலி - கடுகொட புஞ்சிவத்த, ஹாலிவல, நாவின்ன, ஒசனகொட ஆகிய பிரதேசங்களில் உள்ள  பள்ளிவாசல்களுக்கு சொந்தமான இடங்களே இவ்வாறு ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக அடையாளங்காணப்பட்டுள்ளன.

மேற்குறித்த இடங்களில் நீராதாரங்கள் இல்லை என்பதால், பெயரிடப்பட்டுள்ள நான்கு இடங்களில் இரு இடங்களில் ஜனாஸாக்களை அடக்கம் செய்யப்படலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .