2025 மே 21, புதன்கிழமை

“ஜூனுக்குள் தேசிய ஊடகக் கொள்கை”

S.Renuka   / 2025 மார்ச் 06 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தேசிய ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அமைச்சர்,  பாடசாலை பிள்ளைகள் உள்ளிட்டவர்களுக்கு ஊடக நெறிமுறைகள் குறித்து கல்வி கற்பிக்க ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

மேலும், தொலைக்காட்சியின் டிஜிட்டல் மயமாக்கலும் விரைவுபடுத்தப்படும்.

இந்த செயல்முறை தாமதமாகியுள்ளது. ஆனாலும் இந்த பயிற்சியை விரைவுபடுத்த விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .