Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 மார்ச் 23 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
யாழில் டீசலை அருந்திய ஆண் குழந்தை, சனிக்கிழமை (22) அதிகாலை உயிரிழந்துள்ளது. ஊர்காவற்றுறை, நாரந்தனை தெற்கு பகுதியை சேர்ந்த ஒரு வயது 9 மாதங்கள் நிரம்பிய சதீஷ் ரஞ்சித் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
குழந்தையின் தந்தை லான்மாஸ்டர் திருத்த வேலையில் கடந்த 18ஆம் திகதி ஈடுபட்டுள்ளார். பின்னர் டீசலை ஒரு போத்தலில் வைத்து விட்டு சென்றுள்ளார்.
இதன்போது அவ்விடத்திற்கு வந்த குழந்தை பானம் என நினைத்து டீசலை அருந்தியது. இந்நிலையில் குழந்தை மயக்கமுற்றது. பின்னர் குழந்தை ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (22) அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்தது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
16 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago