2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தேநீர் குடிக்க பாதையைக் கடந்தவர் பலி

Princiya Dixci   / 2016 ஜனவரி 28 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேநீர் குடிப்பதற்கென பஸ்ஸிலிருந்து இறங்கி பாதையைக் கடக்க முற்பட்டவரை எதிர்த்திசையில் வந்த தனியார் பஸ்ஸொன்று மோதியதில், குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

பிசோகொட்டுவ, தியசேன்புர பகுதியைச் சேர்ந்த 48 வயதானவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஹபரணை - பொலன்னறுவை பிரதான வீதியின் மொரகஸ்வௌ பகுதியில் இன்று வியாழக்கிழமை (28) அதிகாலை இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபர், கொழும்பிலிருந்து மெதிரிகிரிய நோக்கி வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்துள்ளார். பஸ்ஸானது, தேநீர்க் கடையொன்றுக்கு எதிரில் தரித்து நின்ற வேளை, கடைக்குச் செல்லவதற்கென பாதையைக் கடக்க முற்பட்ட போதே, இவ்விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ்ஸின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X