2025 டிசெம்பர் 03, புதன்கிழமை

தேசிய அனர்த்தத்திற்கு உள்ளான மாவட்டங்கள் அறிவிப்பு

Freelancer   / 2025 டிசெம்பர் 03 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களை அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை அரசாங்கம்  வெளியிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மரணப் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் XI ஆம் பகுதியின் 9 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 'டித்வா' சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட 22 நிர்வாக மாவட்டங்கள் 'தேசிய அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களாக' பெயரிடப்பட்டுள்ளன.

  1. கண்டி நிர்வாக மாவட்டம்
  2. நுவரெலியா நிர்வாக மாவட்டம்
  3. பதுளை நிர்வாக மாவட்டம்
  4. குருநாகல் நிர்வாக மாவட்டம்
  5. மாத்தளை நிர்வாக மாவட்டம்
  6. கேகாலை நிர்வாக மாவட்டம்
  7. கம்பஹா நிர்வாக மாவட்டம்
  8. முல்லைத்தீவு நிர்வாக மாவட்டம்
  9. அநுராதபுரம் நிர்வாக மாவட்டம்
  10. கொழும்பு நிர்வாக மாவட்டம்
  11. யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டம்
  12. பொலன்னறுவை நிர்வாக மாவட்டம்
  13. மன்னார் நிர்வாக மாவட்டம்
  14. புத்தளம் நிர்வாக மாவட்டம்
  15. இரத்தினபுரி நிர்வாக மாவட்டம்
  16. மொனராகலை நிர்வாக மாவட்டம்
  17. மட்டக்களப்பு நிர்வாக மாவட்டம்
  18. அம்பாறை நிர்வாக மாவட்டம்
  19. திருகோணமலை நிர்வாக மாவட்டம்
  20. கிளிநொச்சி நிர்வாக மாவட்டம்
  21. வவுனியா நிர்வாக மாவட்டம்
  22. களுத்துறை நிர்வாக மாவட்டம் (R)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X