2025 ஜூன் 18, புதன்கிழமை

தனியார் வாகனங்களை கோர நடவடிக்கை

J.A. George   / 2021 பெப்ரவரி 10 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை ஏற்றிச் செல்வதற்காக தனியார் பிரிவிடமிருந்து வாகனங்களை பெற்றுக் கொள்வதற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அம்பியுலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளூடாக இதற்கு தேவையான நிதி, பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் இதற்காக மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்களை வழங்குவதற்கு எவரேனும் விருப்பம் கொண்டிருந்தால், தமது சுகாதார அதிகாரிகளுக்கு அது குறித்து அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .