Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூலை 16 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று (16) பிற்பகல் 4 மணிமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடபோவதாக இலங்கை தபால் சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
6/2006 என்ற சம்பள சுற்றறிக்கைக்கு அமைய சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதால் பதவியுயர்வு, ஊதிய அதிரிப்பு உள்ளிட்ட விடயங்கள் கிடைக்காமல் கடந்த 13 வருடங்களாக 26000 ஊழியர்கள் உள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
2018ஆம் ஆண்டு ஜுலை 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதிவரை பாரிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் யோசனைகள் செயற்படுத்தப்படவில்லை என்றும் அந்த சங்கத்தினர் கூறியுள்ளனர்.
இவ்வாறான காரணங்களால் தமது பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்றும், அதன் காரணமாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
18 minute ago
38 minute ago