2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: பலத்த பாதுகாப்பு ஏற்​பாடு​கள்

Freelancer   / 2026 ஏப்ரல் 23 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள நிலையில், பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகளில் கூடு​தல் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

5,949 வாக்​குச்​சாவடிகள் பதற்​ற​மானவை என்று அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. இங்கு நுண்​பார்​வை​யாளர்​கள், துப்​பாக்​கிய ஏந்திய போலீ​ஸார் அல்​லது துணை இராணுவப் படை​யினர் நிறுத்தப்பட்​டுள்​ளனர்.

அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் குடிநீர், கழி​வறை, தடையற்ற மின்​சா​ரம், அவசர மருத்​து​வம், கைப்​பிடி​யுடன் கூடிய சாய்​வுதளம், மாற்​றுத் திற​னாளி​களுக்கு சக்கர நாற்​காலி, நிழற்​பந்​தல், வாக்காளர்​களுக்கு உதவ தன்​னார்​வலர்​கள் ஏற்​பாடு என அனைத்து வசதி​களும் செய்​யப்​பட்​டுள்​ளன.

வாக்​குச்​சாவடிக்​குள் செல்​போன் கொண்​டு​செல்ல அனு​மதி இல்லை என்​ப​தால், நுழைவு​வாயி​லில் செல்​போனை பாது​காப்​பாக வைக்​க​வும் முதல்​முறை​யாக வசதி செய்​யப்​பட்​டுள்​ளது.

இத்​தேர்​தலில் 1,06,408 வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், தலா 75,064 கட்டுப்​பாட்டு இயந்​திரங்​கள் மற்​றும் விவி​பாட் இயந்​திரங்​கள் பயன்படுத்​தப்​படு​கின்​றன. கூடு​தலாக 20 சதவீத இயந்​திரங்​கள் தயார் நிலை​யில் உள்​ளன.

பாது​காப்பு பணி​யில் துப்​பாக்கி ஏந்​திய 300 கம்​பெனி துணை இராணுவப் படை​யினர் ஈடு​பட்​டுள்​ளனர். இவர்கள் 24 மணி நேர​மும் தீவிர ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்டு வருகின்​றனர்.

மேலும், 83,875 பொலிஸ் பணி​யாளர்​கள், 40,427 பொலிஸ் அல்லாத முன்​னாள் இராணுவத்​தினர் உள்​ளிட்ட பணி​யாளர்​களும் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .