2025 ஜூலை 05, சனிக்கிழமை

தமிழ்நாடு சென்ற 34 அகதிகள் தாயகம் வருகை

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகதிகளுக்கான ஜக்கியநாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலக வசதிப்படுத்தலுடன், யுத்தகாலத்தில் தமிழ் நாட்டுக்கு அகதிகளாக சென்றவர்களில், 16 குடும்பங்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

சுயவிருப்பின் பேரில், 16 குடும்பங்களைக் சேர்ந்த 34 பேர் எயர்லங்கா UL-138, UL -132 மற்றும் UL -122 மூலம் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர். இவர்களில்  15 ஆண்களும் 19 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களென,  தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வாளிப்பு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார்.

இவர்களுக்கு இலவச பயணச்சீட்டு, ஒன்றிணைத்தல் மானிய கொடுப்பனவாக வயது வந்தவர்களுக்கு 10,000 ரூபாயும், வயது குறைந்தவர்களுக்கு 5,000 ரூபாயும், போக்குவரத்துக் கொடுப்பனவாக 2,500 ரூபாயும், உணவு அல்லாத மானிய கொடுப்பனவாக தனிநபருக்கு 5,000 ரூபாயும், குடும்பத்துக்கு 10,000 ரூபாயும், அகதிகளுக்கான ஜக்கியநாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலகத்தினால் வழங்கப்படுகின்றது.

மேலும், மீள்குடியேற்ற அமைச்சினால் விமான நிலையத்தில் 5,000 ரூபாயும், தற்காலிக கொட்டகைகளுக்காக 25,000 ரூபாயும், உபகரணங்களுக்கு 3,000 ரூபாயும், காணி துப்பரவு செய்வதற்கு 5,000 ரூபாயும் வழங்கப்படுகிறதென அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன்,  100,000 அகதிகள் இந்தியாவில் தற்போது உள்ளனரெனவும், அவர்களில் 65,000 பேர் அகதி முகாம்களிலும், 35,000 பேர் வெளியிடங்களிலும் வாழ்ந்து வருகின்றனரென மதிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .