2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

தொலைக்காட்சி பார்த்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

Freelancer   / 2025 டிசெம்பர் 24 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீர் என உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் யாழ். ஆலடி உடுவிலைச் சேர்ந்த தேவதாஸ் நிமலதாஸ் (வயது 41) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

கடந்த திங்கட்கிழமை (22) பிற்பகல் திடீரென மூச்சுவிட சிரமப்பட்டு மயங்கி உயிரிழந்தார்.

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X