2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

தலைமை ஆசிரியைக்கு மசாஜ் செய்யும் மாணவர்கள்

Editorial   / 2025 செப்டெம்பர் 03 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை வகுப்​பறை​யில் தலைமை ஆசிரியையின் கை, கால்​களை மாணவர்​கள் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலை​தளங்​களில் வைரலாகி​யுள்​ளது. இதையடுத்​து, தலைமை ஆசிரியை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்​பட்​டு உள்​ளார்.

இந்த சம்பவம், தரு​மபுரி மாவட்​டம் அரூர்  அரு​கே​யுள்ள மாவேரிப்​பட்டி கிராமத்​தில் ஊராட்சி ஒன்​றிய தொடக்​கப் பாடசாலை செயல்​பட்டு வரு​கிறது. இங்கு 30-க்​கும் மேற்பட்ட மாணவ, மாணவி​கள் பயில்​கின்​றனர். தலைமை ஆசிரியை உட்பட 2 ஆசிரியர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

இந்​நிலையில், தலைமை ஆசிரியை கலை​வாணிக்கு மாணவ, மாணவி​கள் கை, கால்​களை அழுத்தி விட்டு மசாஜ் செய்​யும் காட்சி வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகப் பரவியது. இதனால் அதிர்ச்​சி​யுற்ற பெற்​றோர் பாடசாலைக்கு, செவ்வாய்க்கிழமை (02) மாணவர்களை அனுப்ப மறுத்​து, பாடசாலையை முற்​றுகை​யிட்​டனர்.

இதனிடையே, மாவட்ட தொடக்​கக் கல்வி அலு​வலர் விஜயகு​மார், வட்​டாட்​சி​யர் பெரு​மாள், வரு​வாய் ஆய்​வாளர் சத்​யபிரியா ஆகியோர் பள்​ளிக்கு நேரில் சென்​று, சம்​பந்​தப்​பட்ட தலைமை ஆசிரியை மற்​றும் மாணவ, மாணவி​களிடம் விசா​ரணை மேற்​கொண்டனர்.

இதுகுறித்து மாணவர்​களின் பெற்​றோர் கூறும்​போது, “பல்​வேறு நாட்​களில் மாணவ, மாணவி​களை கை, கால்​களை அழுத்​தி​விட சொல்​வ​தாக​வும், இதுகுறித்து பெற்​றோரிடம் கூறக்​கூ​டாது எனவும் மாணவர்​களை தலைமை ஆசிரியை மிரட்​டு​கிறார். மாணவர்களிடம் அத்​து​மீறி நடந்த தலைமை ஆசிரியை மீது உடனடி​யாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று தெரிவித்தனர்.

கல்​வித் துறை அதி​காரி​கள் கூறும்​போது, “வி​சா​ரணை​யைத் தொடர்ந்​து, மாவட்ட நிர்​வாகத்​தின் வழி​காட்​டு​தல்​படி, தலைமை ஆசிரியர் வேறு பள்​ளிக்கு இடமாறு​தல் செய்​யப்​பட்​டுள்​ளார். அவருக்​குப் பதிலாக வேறு ஆசிரியர் உடனடி​யாக பணி​யில் இணைவார்” என்​றனர்​.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .