Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2025 ஜனவரி 05 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஷ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (05) காலை குளிக்கும் போது தவறுதலாக கிணற்றில் விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தும்பங்கேணி கிராமத்தை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய தங்கராசா பரமானந்தம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீர்நிலையில் வீழ்ந்து சனிக்கிழமை (04) உயிரிழந்த குழந்தையின் மரண வீட்டுக்கு சென்றுவிட்டு வந்து குளித்துக்கொண்டிருந்தபோது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக பிரதேசவாசிகளின் உதவியுடன் அவர் பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
33 minute ago
56 minute ago