2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

திடீர் மின் தடையால் அரச சேவைகளைப் பெறுவதில் தாமதம்

Editorial   / 2019 மார்ச் 24 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சார சபையால் முன்னெடுக்கப்படும் திடீர் மின்சாரத் தடையால், அரச நிறுவனங்களில் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் பல ​அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மக்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மின் துண்டிப்பை  மேற்கொள்கின்றமையானது சட்டவிரோதமான செயல் என, இலங்கை பொது உட்கட்டமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொது உட்கட்டமைப்பு ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறாமல் மின்துண்டிப்பை மேற்கொள்கின்றமையானது சட்டவிரோதமானதென்றும் அவ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், இலங்கை மின்சார சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக இலங்கை பொது உட்கட்டமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X