2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

தெற்கில் தொற்று 239 ஆக உயர்வு

S. Shivany   / 2020 நவம்பர் 22 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 239 ஆக அதிகரித்துள்ளதாக, தென் மாகாண கொரோனா தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, காலி மாவட்டத்தில் 159 தொற்றாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 51 தொற்றாளர்களும், ஹம்பாந்தோட்டையில் 29 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தென் மாகாணத்தில் நேற்று புதிதாக 7 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதற்கமைய,  காலியில் மூவரும் மாத்தறையில் நால்வரும் பதிவாகியுள்ளனர்.

எனினும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நேற்றைய தினம் புதிதாக தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லையென, தென் மாகாண கொரோனா தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .