Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
S.Renuka / 2025 மே 27 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை தொடர்ந்து உயர்ந்திருப்பதற்கு முக்கிய காரணம், அரசாங்க தேங்காய் ஏலங்களில் இடைத்தரகர்களின் விலை நிர்ணய நடைமுறைகள் என தென்னை வேளாண்மை சபை தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து அறுவடை குறைந்த போதிலும், விலைகள் ரூ.200க்கு மேல் உள்ளன.
உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் பயன்படுத்தப்படாத அரசு தோட்டங்களைப் பயன்படுத்தும் அதே வேளையில், சதோச மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் சலுகை விலையில் தேங்காய்களை விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
விலைகளை உறுதிப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் மாதங்களில் தேங்காய் அறுவடை மீண்டும் குறையக்கூடும் என்றும், இது மற்றொரு விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றும் ஜெயக்கொடி எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago