2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

தொடர்ந்தும் குறையும் கொரோனா மரணங்கள்

Freelancer   / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

10 ஆண்களும்  08 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,611 ஆக அதிகரித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 12 பேரும் 30 மற்றும் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 05 பேரும் 30 வயதுக்குட்பட்டவர்களில் ஒருவரும் மரணித்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் மேலும் 433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

அதன்படி,  இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  535,961 ஆக அதிகரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .