2026 மே 14, வியாழக்கிழமை

’தொற்றா நோயாளிகளே அதிகம் மரணித்துள்ளனர்’

Niroshini   / 2021 மே 25 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றால் இந்நாட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள், தொற்றா நோய்களால் பீடிக்கப்பட்டவர்களே எனக் கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப் பிரிவின் தலைவரும் விசேட வைத்திய நிபுணருமான டொக்டர் விந்தியா குமாரபேலி தெரிவித்துள்ளார்.

நேற்று (24) மாலை, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே தொடர்ந்துரைத்த அவர், கொரோனா தொற்றுக்கு இலக்காகும் தொற்றா நோயாளிகள் தொடர்பில், சுகாதாரத் தரப்பினர் அதிக அவதானம் செலுத்தி வருகின்றனர் என்றார்.

தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 2 மாதங்களுக்குப் போதுமான மருந்து வகைகளை ஒரே தடவையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்நோயாளிகள், தமக்கான நீரிழிவு மற்றும் கொலஸ்ரோல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு, வைத்தியசாலைகளில் தனியான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .