2026 மே 11, திங்கட்கிழமை

dd

’நடத்த முடியாவிட்டால் கலைத்து விடுங்கள்’

Editorial   / 2019 ஜூலை 17 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைத்துள்ளது போல ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று (16) இடம்பெற்ற பல்வேறு மக்கள் சந்திப்புகளை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் காலம் தற்போது நிறைவடைந்துள்ளதுடன், இன்னும் சில மாதங்களில் தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதால் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு தற்போது முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை நடத்த முடியாவிட்டால் நாடாளுமன்றத்தை கலைத்துவிடுமாறும் நாமல் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .