2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 06:42 - 1     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 
27 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்ட குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், இன்றும் இது தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றன.

விவாதங்கள் நிறைவடைந்ததும் மாலை 6.35 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

குறித்த பிரேரணைக்கு எதிராக அதிக வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரரணை தோல்வியடைந்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.


You May Also Like

  Comments - 1

  • Jeyarajah Thursday, 11 July 2019 11:54 PM

    பிரே ரணை வென்றால் மகிந்தவின் கை ஓங்கும் வாய்ப்பு அதிகம். மகிந்த வில் நம்பிக்கை வைப்பதை விட ரணிலில் வைப்பதே நல்லது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .