2026 மே 11, திங்கட்கிழமை

dd

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

Editorial   / 2019 ஜூலை 11 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற உள்ளது. 

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், இன்றும் இது தொடர்பில் விவாதங்கள் இடம்பெறவுள்ளதுடன், விவாதங்கள் நிறைவடைந்ததும் மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இதேவேளை அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிக்கொள்வதற்காக, அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளிப்பார்களென, தான் எதிர்பார்ப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

 எனினும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க, ஐக்கிய தேசிய கட்சி செயற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .