2026 மார்ச் 05, வியாழக்கிழமை

நாடளாவிய ரீதியில் ஆயுதப்படைகள் குவிப்பு

Freelancer   / 2026 மார்ச் 03 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணும் நோக்கில், நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் அழைப்பதற்கான விசேட கட்டளையை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று பாராளுமன்றத்தில்  அறிவித்தார்.

பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் 12 ஆவது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே இந்த விசேட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் அமைதி மற்றும் சட்ட ஒழுங்கைப் பராமரிப்பதில் பொலிஸாருக்கு  ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் நாடளாவிய ரீதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .