2026 மே 06, புதன்கிழமை

நாடு திரும்பினார் பிரதமர் ரணில்

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹீம் மொஹமட் சோலியின் அழைப்பை ஏற்று செப்டெம்பர் 02ஆம் திகதி மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  மீண்டும் நாடு திரும்பினார்.

மாலே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யூ.எல் - 102 என்ற விமானத்தில் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

பிரதமருடன், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், தயா கமகே, அனோமா கமகே மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோர் சென்றிருந்தனர்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதுடன், அந்நாட்டு நாடாளுமன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (03) விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .