2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சில பகுதிகளில் வழமையை விட 2 தொடக்கம் 4 பாகை செல்சியஸுக்கு இடைப்பட்ட அளவில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய வெப்பநிலையாக 35.3 பாகை செல்சியஸ் வெப்பநிலை கொழும்பில் பதிவாகியுள்ளது.

அத்துடன், காலியிலும் 4 பாகை செல்சியஸ் அதிகரித்த வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், திருகோணமலை மற்றும் இரத்மலானை பகுதிகளில் வழமையை விட 3 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

புத்தளம், கட்டுநாயக்க, ஹம்பந்தோட்டை ஆகிய பகுதிகளில் வழமையை விட 2 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .