2025 ஜூன் 25, புதன்கிழமை

’நாட்டை வீணடித்த ஐ.தே.கவுக்கு வாக்கு வராது’

Editorial   / 2019 ஓகஸ்ட் 10 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதிகாலம் முடிவடைந்த நிலையில், நாட்டை வீணடித்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் மீண்டும் வாக்களிக்கத் தயாராக இல்லை என, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியிலுள்ள கட்சிக் காரியாலயத்தில், இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலையகத் தொழிற்சங்கங்களும் வடகிழக்கில் உள்ளவர்களும் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து ஆராய்ந்து வருவதகாவும் நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தேவையான பாதுகாப்பான தலைவரே தற்போது தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த அனைத்து தகுதிகளும் எமது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவே பொருத்தமாக இருப்பார் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .