2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

‘ நான் தனித்து விடவில்லை‘

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப் பொருளுக்கு எதிரான போராட்டத்தில் தான் தனித்து விடவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் 90 சதவீதமான மக்கள் தனது போராட்டத்துடன் இணைந்துள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று இரத்தினபுரி நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனையை வழங்குவது குறித்து, தான் எடுத்த முடிவுக்கு எதிராக, அரசாங்கத்தில் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் வீதிக்கு இறங்கும் போது, போதை வர்த்தகர்கள், குற்றவாளிகள் ஆகியோர் வெற்றிக்களிப்பில் ஈடுபடத் தொடங்கி விட்டனர் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .